பிரான்ஸின் லா போஸ்ட் என்னும் அந்த நாட்டு தபால் திணைக்களம், விடுதலைப்புலிகளின் சின்னங்கள் அடங்கிய நான்கு தபால் முத்திரைகளை வெளியிட்டுள்ளது.
இந்தத் தபால் முத்திரைகளை உடனடியாக இரத்து செய்ய வேண்டுமென இலங்கை முத்திரை சங்கம் சர்வதேச தபால் சங்கத்திடம் கோரவுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் குறித்த முத்திரைகளை பிரான்ஸ் அரசாங்கம் இதுவரையில் உத்தியோகபூர்வமாக தடை செய்யவில்லை என இலங்கை முத்திரைகள் சங்கத்தின் பொருளாளர் துமிந்த கொடஹேவா தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் பிரான்ஸ் தூதுவர் மன்னிப்பு கோரியுள்ளாரே தவிர, முத்திரைகளை தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
முத்திரைகள் தடை செய்யப்படாவிட்டால் சர்வதேச முத்திரைகளின் விலையை நிர்ணயம் செய்யும் ஸ்டென்லி கிபன் பட்டியலில் இந்த முத்திரைகள் இடம்பெறக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. இதன்மூலம் பயங்கரவாத அமைப்பு ஒன்றை போஷிக்கும் வகையில் எந்தவொரு நாட்டிலும் முத்திரைகள் அச்சிடப்டக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.