ஜேர்மனியின் கொரோனா தடுப்பூசி எப்போது தயாராகும் என்பது குறித்து நாட்டின் சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் தகவல் தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாயன்று கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த முதல் நாடு ரஷ்யா என அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்தார். எனினும், ரஷ்யா தடுப்பூசி மீது உலகெங்கிலும் உள்ள நிபுணர்கள் தொடர்ந்து சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.
ஜேர்மனியின் சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பானும், ரஷ்யா தடுப்பூசி போதுமான அளவு பரிசோதிக்கப்படாவிட்டால் மில்லியன் கணக்கானவர்களுக்கு தடுப்பூசி போடுவது ஆபத்தானது என்று எச்சரித்தார்.
இந்நிலையில், எதிர்வரும் மாதங்களில், நிச்சியமாக அடுத்த ஆண்டு ஜேர்மனியிடம் கொரோனா தடுப்பூசி இருக்கும் என ஜென்ஸ் ஸபான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
எனினும், அவர் மாதத்தை என குறிப்பிட மறுத்துவிட்டார், மேலும் மக்களுக்கு எத்தனை முறை தடுப்பூசி போட வேண்டும் அல்லது தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு காலம் நீடிக்கும் என்று தற்போது வரை சொல்ல முடியவில்லை என்றார்.
ஆனால், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், பொதுமக்கள் என நாம் அனைவரும் ஒன்றாகச் செயல்பட்டதற்கு நன்றி, மனிதகுல வரலாற்றில் இதற்கு முன்பு இருந்ததைவிட விரைவாக தடுப்பூசி நம்மிடம் இருக்கும் என ஜென்ஸ் ஸ்பான் கூறியுள்ளார்.