தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் முத்திரை தொடர்பில் பிரித்தானியா வருத்தம் வெளியிட்டது
இலங்கையின் உயர்ஸ்தானிகர், இந்த விடயம் தொடர்பாக ரோயல் மெய்லின் கவனத்துக்கு கொண்டு வந்தமையை அடுத்தே இவ்வாறு வருத்தம் வெளியிடப்பட்டுள்ளது.
தனிப்பட்டவர்களால் முத்திரைகளில் இவ்வாறான படங்களை பொறிக்க முடியும் என்ற அடிப்படையில் இந்த முத்திரைகள் பயன்பாட்டில் இருந்துள்ளன.
எனினும் அதனை கண்டறிந்து தாம் அவற்றை தடுத்து விட்டதாக ரோயல் மெயில் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.